நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

Ernest Hemingway - Nobel Prize in Literature (1954) winner


நீ ஒரு கம்யூனிஸ்டா?
இல்லை. பாசிஸ எதிர்ப்பாளன்!
எவ்வளவு நாட்களாக?
அதைப் புரிந்துகொண்ட நாளிலிருந்து...

For Whom the Bell Tolls நாவலில் இருந்து


தமிழ்நாட்டில் அணைகள் - ஒரு கணக்கீடு


பெருந்தலைவர் காமராஜர் காலத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லையா என்றால், இல்லை என்பது தான் பதில். ஆம் தமிழகத்தில் கலைஞரே அதிக அணைகள் கட்டியுள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள அணைகள் - 115
சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை - 25
காங்கிரஸ் ஆட்சியில்(19 வருடங்கள்) கட்டப்பட்டவை - 25
திமுக ஆட்சியில் (21 வருடங்கள்) கட்டப்பட்டவை - 36
அதிமுக ஆட்சியில் (25 வருடங்கள்) கட்டப்பட்டவை - 29

திமுக கால - அணைகள்
01. உப்பாறு(ஈரோடு) அணை
02. சிற்றாறு I அணை
03. மணிமுக்தனாதி அணை
04. சோலையாறு அணை
05. மேல் ஆழியாறு அணை
06. கீழ் கொடையாறு அணை
07. சிற்றாறு II அணை
08. மேல் கொடையாறு அணை
09. கடான அணை
10. பரப்பலாறு அணை
11. பொன்னணியாறு அணை
12. ராமநதி அணை
13. சின்னாறு அணை
14. கருப்பாநதி அணை
15. ஏறவங்கலாறு அணை
16. குண்டேரிப்பள்ளம் அணை
17. ஹைவேய்ஸ் அணை
18. மணலாறு அணை
19. பாலாறு பொருந்தலாறு அணை
20. வரதமநதி அணை
21. வரட்டுப்பள்ளம் அணை
22. வட்டமலைக்கரை ஓடை அணை
23. வெண்ணிறாறு அணை
24. அனைக்குட்டம் அணை
25. குதிரையாறு அணை
26. நொய்யல் அதுபாளையம் அணை
27. நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை
28. ராஜதோப்புகனாறு அணை
29. பொய்கையாறு அணை
30. மொர்தனா அணை
31. சோத்துப்பாறை அணை
32. அடைவினைநர்கோவில் அணை
33. நங்காஞ்சியாறு அணை
34. செண்பகத்தோப்பு அணை
35. இருக்கன்குடி அணை
36. மாம்பழத்துறையாறு அணை
 
ஆதாரம் -  Dams in Tamilnadu 

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்




ஆண்டுகளுக்கும் மேலாக தேடி ஒரு வழியாக இந்த புத்தகத்தை வாங்கி படித்து விட்டேன்.

நாம் திரையில் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கும் இந்நூலில் சொல்லப் பட்டிருக்கும் பல செய்திகள் நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கின்றனமுதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு என்பது. பலபேர் இன்று வரை கட்டபொம்மனை பச்சைத் தமிழன் என்றே போற்றிப் பரப்புரை செய்து வருகிறார்கள்

கட்டபொம்மனின் பரம்பரை பின்வருமாறு
·         காட்ர கட்ட பிரமையா - குலமுதல்வன்
·         கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்மன் - கொள்ளுப் பாட்டன்  (காலம் 1709 - 1736)
·         பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் - பாட்டன்  (காலம் 1736 - 1760)
·         இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் - தந்தை  (காலம் 1760 - 1790)
·         வீரபாண்டிய கட்டபொம்மன் - கதை நாயகன்  (காலம் 1790 - 1799)  

இந்த தலைமுறையிலும் எந்த ஒரு கட்டபொம்மனும் வெள்ளையரை எதிர்க்க பயந்தவர்களே. அதற்க்கு தமிழ்வாணன் அவர்கள் நிறைய மேற்கோள்கள் காட்டியுள்ளார். மேலும் இவர்கள் தங்களை சுற்றியுள்ள சிறு கிராமங்களை கொள்ளையடிப்பதையே முழுநேர தொழிலாய் கொண்டிருக்கிறார்கள்.

வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கும் (கடைசி கட்டபொம்மன்வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே தர  விரும்புகிறேன்

திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன் வரிகட்டச் சொல்லி வீரபாண்டியக் கட்ட பொம்மனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். வீரபாண்டியக் கட்டபொம்மனோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக்கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார். ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்மன் குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்மன் தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பிவிடுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திப்பதற்காக அவரை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார் அங்கும் கட்டபெம்மனை பார்க்க ஜாக்சன் மறுத்துவிடுகிறான். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்மனும் ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்ட பொம்மனை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.

இறுதியில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து வரிகட்டாமையைப் பற்றி விளக்கம் கொடுத்து தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டு வந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்மன் மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்கவேண்டும்என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்மன் அஞ்சி அங்கிருந்து தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளையன் கொலை செய்யபடுகிறான்

இந்த நிகழ்வு கட்டபொம்மனை வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார். அப்படி என்றால் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் அதாவது கட்டபொம்மனைத் தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.

கட்டபொம்மனை பற்றிக் கூற ஆரம்பித்ததில் இருந்தே கட்டபொம்மன் தன்னுடைய பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது கொள்ளையடித்து வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார் தங்கள் பாளையத்தில் கட்டபொம்மன் கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார். அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்மன் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற்களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்மனை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார்.

கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க அஞ்சு நாட்களைக் கடத்துகிறார். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்மன் தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே என்கிறார். கட்டபொம்மனைப் பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்திடம் இருந்து நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்மன் புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்மனைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் காட்டி தூக்கில் போடுகிறார்கள்.

எனக்குள்ள வருத்தம் என்னவென்றால், வெள்ளைக்காரனுக்கு பணிந்து சென்ற ஒருவரை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று உண்மையை மறைத்து வீரனாக திரித்து, ஒரு வரலாற்றையே அடுத்த தலைமுறைக்கு தவறாக காட்டப்பட்டது.

திரைப்படத்தில் வரும் எட்டப்பன் என்ற ஒருவனைத் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்ற ஒருவனைக் காட்டியுள்ளது. ஆக, கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல்வரலாற்றுப் பிழையாகவே இருக்கிறது
தமிழர்கள் அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்

வெள்ளையனுக்கு அடிமைப்படாத ஒரு சுதந்திர அரசுக்கு அதிபதியாக இருந்திருந்தால், கட்டபொம்மன் கலெக்டரைக் காணப் போயிருக்க வேண்டியதில்லை. கலெக்டரின் ஆணையை அவன் ஆண்மையுடன் மறுத்து நின்றிருக்கலாம். அவன் என்றுமே கும்பினிக்கு வரி செலுத்தாதவனாக இருந்தால், புதிதாக வந்து வரி கேட்பவர்களிடன் கொடுக்க முடியாது என்று உறுதியுடன் கூறியிருக்கலாம். அவன் எழுதியுள்ள எந்த ஒரு கடிதத்திலும், கட்டபொம்மன் ஆங்கிலக் கும்பினியின் மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை. வரி கொடுக்க முடியாது என்றும் சொல்லவில்லை. அதற்கு மாறாக, வரி செலுத்துவதற்கு தவணைகள் தாம் கேட்டிருக்கிறான் அல்லது சாக்குப்போக்குகள் சொல்லி வந்திருக்கிறான்” (பக்கம் 159)

கட்டபொம்மனின் கோழை மற்றும் கொள்ளைத்தனத்தை விரிவாக எடுத்துக்கூறிய தமிழ்வாணன் அவர்கள், புலித்தேவனின் வீரத்தையும் அங்கங்கே பதிவு செய்திருக்கிறார். மேலும் பக்கம் 89, 90ல் அவர் புலித்தேவனைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளதாகவும் அதை தனியாக ஓர் புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் நான் தேடிய வரை அப்படியொரு புத்தகம் எனக்கு அகப்படவில்லை.

இதில் இன்னொரு சுவாரிஸ்யமான தகவல் கம்மந்தான் கான்சாஹிப் பற்றியது. மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முஹமதியனாக மதம் மாறிய மாவீரன் தான்  கம்மந்தான் கான்சாஹிப். 1760களில் இவன் மதுரை கவர்னராக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டவன் (பக்கம் 91). இவன் கதையைத்தான் திரு.கமல்ஹாசன் அவர்கள் மருதநாயகம் எனும் திரைப்படமாக எடுக்க முயற்சிகள் எடுப்பதாக செய்திகள் வருகின்றன

இறுதியாக...

16-10-1799 அன்று கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு தூக்கிலேற்றப்பட்டான், அவன் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் அல்ல, தான் செய்த கொலை கொள்ளைகளை ஒப்புக்கொண்டமையால்.
திரு.குருகுகதாசப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம் என்ற நூலில் இருந்து நிறைய மேற்கோள்கள் தமிழ்வாணன் அவர்களால் இந்த புத்தகத்தில் காட்டப்பட்டுள்ளது

திரு..பொ.சி யின் வீரபாண்டிய கட்டபொம்மன் நூலுக்கு மறுப்பு தெரிவிக்கும் நூலாக தமிழ்வாணன் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் உண்மை வரலாறை மக்களுக்கு தெளிவு படுத்தும் தமிழ்வாணன் அவர்களின் இந்த முயற்சிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.